கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி (நாளை ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 மாவட்டங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.