செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலய ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜூலை 22ல்) விருதுநகர் மாவட்டத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.