RSS பேரணிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ஆர் எஸ் எஸ் பேரணியை அனுமதிப்பது என்பது சிக்கலான விஷயம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனைப் போலவே ஆர் எஸ் எஸ் தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகின்ற மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை மறுநாள் நடத்த இருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் உறுதி தெரிவித்துள்ளது.