இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக படித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மாநிலம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 3.98 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டண நிலவையை துரிதமாக வழங்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் அண்மையில் அரசுக்கு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து அதனை ஏற்று தனியார் பள்ளிகளுக்கு 2021 – 2022-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கட்டண நிலுவை தொகை ரூ.364.43 கோடிகான நிதியை தமிழக அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா  உஷா தற்போது இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக 3.98 லட்சம் குழந்தைகள் பயன்பெற இருக்கின்றனர். மேலும் நிகழ் கல்வியாண்டிற்கான கல்வி கட்டண நிலவை தொகை விரைந்து வழங்குவதற்கான பணிகளும் முடக்கி விடப்பட்டிருப்பதாக துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.