தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் நாளை கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்குஉள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அய்யா வைகுண்டசாமி 191வது அவதார தினத்தை முன்னிட்டு, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றால் இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.