விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மறைந்ததால் தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் காலியாகிவிட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.