10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீடு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் அமைச்சரவையில் மூன்று சதவீதம் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். இனியும் பாஜக ஆட்சி தொடர்ந்தால் இட ஒதுக்கீடுகள் மத்தியில் மட்டுமல்லாமல் மாநில அரசிலும் இருக்காது.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க ஒவ்வொருவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைய விட்டால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற அவல நிலை தான் உருவாகும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.