தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுவும் சமவெளி பகுதிகளில் 3 முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசும். எனவே அதிக வெப்பத்தால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம். இளநீர் மற்றும் மோர் அடிக்கடி அருந்தவும்.