தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாதமும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கண்டிப்பாக உரிமை தொகை கிடைக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசி உள்ள அவர், விண்ணப்பிக்கும் போது சில தவறுகள் நடந்திருக்கலாம் அதனை சரி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையிட்டும் அணுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.