தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் குமரி கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் டிசம்பர் 23ஆம் தேதி இன்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் யாரும் அந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.