தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் இன்று டிசம்பர் 23 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்ததால் இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளித்து அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை மொத்தம் ஒன்பது நாட்கள் விடப்பட்டுள்ளது. அதேசமயம் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறந்த பிறகு தேர்வுகள் நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.