தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் ஐடிஐ டிப்ளமோ பொறியியல் முதுகலை இளங்கலை பட்டாதாரிகள் என அனைத்து கல்வி தகுதி உடையவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள்  https://forms.gle/vZWbUPHnMgRGxXrP8 என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.