தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்வி சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.