தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நவம்பர் 25ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகம் காலை 9 மணி முதல் மதியம் மூன்று மணி வரை நடைபெற உள்ள நிலையில் அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.