தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் 32 காலி பணியிடங்களைக் கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முதன்மை தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்படும் எனவும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு குறித்து அறிவிப்பு வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகும். அதன் தொடர்ச்சியாக விண்ணப்ப பதிவு நடைமுறைகள் முடிவடைந்து தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.