தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பாக பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால், பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்க கோரி மனு சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பால் விற்க தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என சர்வேயில் தெரியவந்துள்ளது என்று ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.