தமிழகத்தில் அடுத்த வாரம் செப்டம்பர் 28-ம் தேதி மிலாது நபி, மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு இடையில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், செப்டம்பர் 29-ம் தேதி மட்டும் நீங்கள் விடுமுறை எடுத்தால் உங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

இந்த தொடர் விடுமுறை நாட்களில் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், வெளியூர் செல்பவர்கள் இப்போதே பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கடைசி நேரம் பேருந்தில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம் என்பதால் இப்போதே திட்டமிடுங்கள்.