கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் மின்சாரத்துறை பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிகள் இன்று 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நெல்லிக்குப்பம் பத்திரப்பதிவு அலுவலகம், பூலோகநாதர் கோவில், பத்மாவசம், காமராஜர் நகர், ஜானகிராம் காலனி, மெயின் ரோடு ஸ்டேட் பேங்க் வரை, ரகுமான் நகர், எஸ்.என்.நகர், திருக்குளம், ஆரோக்கியசாமி தெரு, தீயணைப்பு நிலையம், மகளிர் மேல்நிலைப்பள்ளி, பூந்தோட்டம், ராஜாஜி வீதி, கைலாசநாதர் கோவில் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கூடலூர், பந்தலூர் மற்றும் தாளூர் ஆகிய பகுதிகளில் இன்று 16ம் தேதி மின் விநியோகம் இருக்காது. இதன்படி உப்பட்டி துணை மின்நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா பந்தலூர், அத் திகுன்னா,கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய் யன்கொல்லி, வுட்பிரேர் , நம்பர் 3 டிவிஷன், 1வது மைல், 2வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திபள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பகாடு, பாட்டவயல், நெலாக் கோட்டை, கார்குடி மற்றும் தேவர்சோலை ,சேரம்பாடி துணை மின்நிலையம்: சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன் சோலை, கையுன்னி, எரு மாடு, தாளூர், பொன்னச் சேரர், கக்குண்டி மற்றும் சோலாடி ஆகிய பகுதிகள். கூடலூர் துணை மின் நிலை யம்: கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம். செம்பாலா, ஓவேலி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள் புரம், அண்ணா நகர், முதுகுடி, ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் கூறினார்.

ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை 17.10.23 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம் ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு ரோடு, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுவதாக மின் செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.