கன்னியாகுமரி:

கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 3ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலணி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது.

திண்டுக்கல்:

நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள்நத்தம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மே 3ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுவதால், சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம், சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி , குண்டலப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை, மின் வினியோகம் இருக்காது.

திருவள்ளூர்:

3ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால்,
போரூரில் மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகர், பூந்தமல்லி மற்றும் பூந்தமல்லி நகராட்சி முழுவதும், கரையான் சாவடி முழுவதும், கே.கே.நகர், வசந்தபுரி, ஜீவா நகர், கோவூர், ஏரிக்கரை, காமராஜ் நகர், திருமலை நகர், திருமுடிவாக்கம் 1, 5, 6, 14-வது பிரதான சாலை, புத்த மேடு, திருமுடிவாக்கம் சிட்கோ, ராயல் கேஸ்டல் குடியிருப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் அவென்யூ, மாங்காடு, பட்டூர் பஜார் தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், எஸ்.ஆர்.எம்.சி, பரணிபுத்தூரில் ஒரு பகுதி, தெள்ளியர் அகரம், தனலட்சுமி நகர், ரம்யா நகர், முத்தமிழ் நகர், கங்கையம்மன் கோவில் தெரு, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை ஊராட்சி, மலையம்பாக்கம், அகரமேல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதுரை:

3ஆம் தேதி (புதன்கிழமை) பரவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி கீழ நெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார் நத்தம், மணியஞ்சி, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.