தமிழகத்தில் உள்ள KV பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த வேண்டும் என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களை துணை தேர்வை எழுத அனுமதிப்பதில்லை என்று மாணவர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள்,மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறி மூன்று வாரங்களுக்குள் பதினொன்றாம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.