தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தேனி மாவட்டத்தில் தொழில்நெறி  வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது.

கம்பம் நகரில் உள்ள ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் கல்வி தகுதி ஆவணங்கள் மற்றும் சுயவிவர குறிப்பு எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.