ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை 17ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற 22-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர திருவிழா 21ல் நடைபெறுவதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.