தமிழகத்தில் கடந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் இன்று அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்று பல தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. வழக்கமான பாட வேலையைப் போல் இன்று நடக்கும் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என நினைத்த மாணவர்களின் பெற்றோருக்கு நேற்று மாலை பள்ளிகள் திறக்கப்படும் என மெசேஜ் வந்துள்ளது.