தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம் ஊக்க ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.