பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்  உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நாளான ஆடித்தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அன்று நடக்க உள்ளது.

இத்தினத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வருவார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளாக ஜூலை 31ஆம் தேதி ஆகிய இன்று  தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.