தமிழகத்தில் மழைக்கால மருத்துவ முகாம்கள் இனிவரும் நாட்களில் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மழைக்கால காய்ச்சலை தடுப்பதற்காக மருத்துவ முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மருத்துவ முகாமை சனிக்கிழமைக்கு மாற்றி அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.