திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நவம்பர் 28ஆம் தேதி இன்று துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு 1, 2,3 தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றும் ரயில் நகர் பழையது பகுதிகளிலும், எல் ஐ சி காலனி பகுதி உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நவம்பர் 29ஆம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது என்று பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நவம்பர் 30ம் தேதி வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.