தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆயக்குடி ஜேபி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைத்து கலை அறிவியல், பட்ட பொறியியல் மற்றும் மருத்துவம் உட்பட அரசு அங்கீகாரம் பெற்ற மூன்று வருடத்திற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்புக்கான கல்வி கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோருடன் உரிய ஆவணங்களை கொண்டு வந்து கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.