நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கூக்கல் தொரை கிராமத்தில் பள்ளி பேருந்து மோதி 5 வயது சிறுமி லயா உயிரிழந்தார். தப்பிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவி, ஷோபனா, தம்பதியினரின் மகள் லயா (5) கேர்கம்பை பகுதியில் உள்ள இல்போர்ட் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி லயா வாகனத்தின் பின்புறத்தில் சென்றதாக தெரிகிறது. அப்பொழுது ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி லயா பரிதாபமாக உயிரிழந்தார்.