தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் தமிழகத்தை சேர்ந்தவராகவும் தமிழ் இதழியல் துறையில் பத்து வருடம் பணிபுரிந்து அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதேசமயம் பத்திரிகை துறையில் முழு நேரம் பணி இருந்தவராக இருக்க வேண்டும் எனவும் தகுதியுடையவர்கள் விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணத்தை இணைத்து செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.