தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை மற்றும் கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிர படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.