தமிழ்நாடு காவல்துறை முன்னாள் டிஜிபி திரு BP. ரங்கசாமி ஐபிஎஸ் அவர்கள் உடல் நல குறைவால் இன்று காலமானார். இவரின் மறைவுக்கு பல அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது மரணச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.