மதுரை மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 11 ஆம் தேதி மதுபான கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதாவது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக, மதுரை மாநகரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த செய்தியை அறிந்த குடிமகன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.