தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி போன்ற மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மட்டும் இயங்கும் என்றும் உணவு வழங்கல் துறை அறிவித்தது . எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் மூலம் அளிக்கப்பட்டுள்ள நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது.