தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் 2265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதனைப் போலவே பிற மாவட்டங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல 1700 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளும் வழக்கமான பயண நேர அடிப்படையில் இயக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.