தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்வி சான்றுகளில் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும் இந்த முகம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ள நபர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.