விருதுநகரில் வசிக்கும் வாலிபர் தனது 17 வயது தம்பியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அப்போது 17 வயது சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறினான். இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது தம்பி என்று கூட பார்க்காமல் அவரை அரிவாள்மனையால் சரமாரியாக வெட்டினார்.

இதனால் படுகாயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.