தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் ஆகியவை தடையின்றி கிடைக்க செய்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆகியவை இனி ஆறாம் வகுப்பிலேயே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.