‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நான் முதல்வன்  திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.