தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில்  தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைம் தெரிவித்துள்ளது.

ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர், க.குறிச்சி, விழுப்புரம், திருச்சி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.