வங்கதேசத்தின் நெரிசலான ஒரு பகுதியில் நடைபெற்ற குடும்பத் தகராறு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வீட்டில் நெருக்கமாக இருப்பதை நேரில் பார்த்த மனைவி, ஆத்திரத்தில் அந்தப் பெண்ணைத் தடுத்தபோது விவகாரம் கைகலப்பாக மாறியது. இதில் துளியும் குற்ற உணர்வு இல்லாத கணவன், தனது கள்ளக்காதலியைத் தற்காத்துக் கொள்ள மனைவியை ஓங்கி அறைந்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.
Kangladesh: Video Goes Viral: Wife Catches Husband With Another Woman and Grabs Her – Husband Slaps Wife to Make Her Let Go, Then Picks a Fight With Bystander Who Intervenes pic.twitter.com/JXRBabDDpS
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 10, 2026
இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முயன்ற பொதுமக்களையும் அந்தக் கணவன் தாக்கியதால், அந்த இடமே போர்க்களமாக மாறியது. தனிப்பட்ட துரோகங்கள் இன்று கேமராக்கள் மூலம் பொதுவெளிக்கு வந்து ஊர் சிரிப்பாய் மாறுவது ஒருபுறம் இருந்தாலும், மனைவியைத் தாக்கும் கணவனின் வன்முறைப் போக்கு மற்றும் சமூக ஒழுக்கமின்மை குறித்து இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘வைரல் துரோகம்’ என்ற பெயரில் பகிரப்படும் இந்தக் காட்சிகள், இன்றைய உறவுகளின் சீரழிவைச் சுட்டிக்காட்டுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
