மத்தியபிரதேசம் மொரேனாவில் ரத்தன்பாசி கிராமத்தில் வசித்து வந்தவர் ஷிவானி தோமர் (18). இவர் அருகில் உள்ள பலுபு கிராமத்தை சேர்ந்த ராதிஷ்யம் தோமர் (21) என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஷிவானி தங்களது காதலை தொடர்ந்தனர். இந்நிலையில் ஜூன் 3-ம் தேதி ராதிஷ்யம், ஷிவானியை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது ” ஷிவானியின் தந்தையிடம் விசாரணை நடத்தியபோது மகளையும் காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கடந்த ஜூன் 3-ம் தேதி இருவரையும் சுட்டுக் கொன்ற பின், அவர்களின் உடலில் பெரிய கற்களை கட்டி முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் வீசியதாக ஷிவானியின் தந்தை கூறியுள்ளார்.