ஆந்திரா மாநிலம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் கிராம மக்கள் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர்.

இந்நிலையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதில் தவறான ஊசியை போட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பிடிப்பட்ட தெரு நாய்கள் பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.