தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். படிப்படியாக கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவரும் அவருக்கு தற்போதைய ஒரே ஆசை நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்பதுதானாம். சமீபத்தில், எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் விஜய்யை சந்தித்தபோது தனது ஆசையை கோரிக்கையாக நேரில் வைத்துவிட்டாராம். அதற்கு விஜய் புன்னகையை பதிலாக அளித்து சென்றாராம்.