தனுஷ் தன் மகன் என கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த கதிரேசனுக்கு கடந்த ஓராண்டாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.