தமிழகத்தில் விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு குறித்த விசாரணையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமை நீதிபதி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.