நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர் சந்திரசேகர் வீட்டில் நடந்த ஐடி சோதனையில் ரூபாய் 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருந்த புகாரை அடுத்து சோதனை நடந்தது. தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் சந்திரசேகரின் காந்தி நகர் கூட்டுறவு காலணி வீட்டில் சோதனை நடந்தது. தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என வருமானவரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பணம் பதுக்கள் தொடர்பான புகார்களை 94453 94453 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..