கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ராஜசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.