மதுரை மாவட்டத்திலுள்ள மங்களக்குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 9 வயதுடைய அஜிதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஜிதாவுடன் அவரது தாய் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூன்றுமாவடி பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி மொபட் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி தாயும், சிறுமியும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிந்து லாரி டிரைவரான தன இந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.