நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாலம் குன்றில் கடவு பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் சிவன் சிலை காணாமல் போனது. இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவில் நிர்வாகிகள் சார்பில் விளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

நேற்று விளக்கு பூஜை செய்வதற்காக நிர்வாகிகள் கோவிலுக்கு சென்றபோது கருவறையில் 7 அடி அளத்திற்கு குழி தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கோவிலில் இருந்த புராதன பொருட்கள் கொள்ளடிக்கப்பட்டதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.